சென்னை , ஆக.20-
சென்னை, எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் இருந்து ரேசன் அரிசி ஆந்திர மாநிலத்துக்கு கடத்தப் படுவதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறை யினர் ஜாபர்கான் பேட்டை காசி திரையரங்கம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் ஏராளமான ரேசன் அரிசி மூட்டைகள் பதுக்கி கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக் கப்பட்டது. இதையடுத்து ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட கொடுங்கையூரை சேர்ந்த கமல் கிஷோர் (26), வியாசர்பாடியை சேர்ந்த மணிகண்டன் (23) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களி டம் இருந்து 1600 கிலோ ரேசன் அரிசி மூட்டைகள் பறி முதல் செய்யப்பட்டது.