சேலம், மே 8- தலைவாசல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் காரணமாக இரண்டு வாரங்களில் கோழிப்பண்ணைகளில் இருந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்ட முட்டை கோழிகள் உயிரிழந்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள் ளனர். சேலம் மாவட்டத்தின் ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, மலை யாளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட முட்டை கோழிப் பண்ணைகளில் 25 லட்சம் கோழி கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதில் நாள் ஒன்றுக்கு 23 லட்சம் மூட்டை உற்பத்தி செய்யப்படுகி றது. இந்நிலையில் சேலம் உள் ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. சேலம் மாவட் டத்தில் கடந்த இரண்டு வாரங்க ளில் 110 டிகிரியை தாண்டி வெப் பம் வாட்டி வதைத்து வந்த நிலை யில், பொதுமக்கள் மட்டுமல்லா மல் கால்நடைகளும் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகின. கடந்த இரண்டு வாரங்களாக வெயில் தாக் கம் காரணமாக கோழிப்பண்ணை களில் இருந்த 2 லட்சத்திற்கும் மேற் பட்ட முட்டை கோழிகள் பரிதாப மாக உயிரிழந்தன. இதனால் முட்டை உற்பத்தியும் 20 சதவிகிதம் குறைந் துள்ளதாக கோழிப்பண்ணை உரி மையாளர்கள் வேதனையுடன் தெரி வித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு முட்டை கோழிப்பண்ணை சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் வசந்தராஜன் கூறு கையில், தலைவாசல், ஆத்தூர், கெங்கவல்லி சுற்றுவட்டார பகு திகளில் கோழிப்பண்ணைகளில் நாள்தோறும் 23 லட்சம் முட்டைகள் உற்பத்தியாகி வந்த நிலையில், தற் போது 17 முதல் 18 லட்சம் வரை மட்டுமே முட்டை உற்பத்தி நடை பெற்று வருகிறது. கோடை வெயி லின் தாக்கம் அதிகரித்ததன் காரண மாக கடந்த இரண்டு வாரங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட முட்டை கோழிகள் உயிரிழந்துள்ளன. மேலும், இப்பகுதியில் மும்முனை மின்சாரம் வழங்கப்படாததால், கோழிகளுக்கு தண்ணீர் கொடுப் பதிலும், தீவனம் அரைப்பதிலும் சிக்கல் உள்ளது. அதேபோல் இப் பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டி ருப்பதாகவும், கோழிகளின் இறப்பு விகிதம் குறைப்பதற்கு கோழியின் மீது சொட்டு நீர் மூலம் தண்ணீர் தெளிக்கப்படுவதாகவும், கோழி கள் மீது வெயில் தாக்கம் குறைப்ப தற்கு தேவையான நடவடிக்கைகள் கோழிப்பண்ணை உரிமையாளர் கள் எடுத்து வந்த போதிலும் மும் முனை மின்சார பிரச்சனை மற்றும் வெயில் தாக்கம் காரணமாக தொடர்ந்து கோழிப்பண்ணை தொழிலை நடத்த முடியாத சூழல் உள்ளது. இவ்வாறு அவர் கூறி னார்.