districts

கஞ்சா விற்ற 2 பேர் கைது

திருநெல்வேலி ,மார்ச் 30- நெல்லை மாநகரில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்ப னையை தடுக்க போலீசார் கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என  மாநகர போலீஸ் கமிஷனர் துரைக் குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் துணை கமிஷ னர் சுரேஷ்குமார் மேற்பார்வையில் பாளை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது கொக்கிரகுளம் பகுதியில் ஒரு வாலிபர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந் தார். போலீசார் அவரை பிடித்து  விசாரணை நடத்தினர், அதில் நெல் லையை சேர்ந்த சங்கரபாண்டியன் (20) என்பதும் கஞ்சா விற்றுக் கொண் டிருந்ததும் தெரியவந்தது. இதைய டுத்து அவரை கைது செய்த போலீ சார் அவரிடம் இருந்து 1,100 கிலோ  கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.  இதேபோல் மாவட்ட எஸ் பி உத்தர வின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் நாங்குநேரியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப் போது நாங்குநேரி பஜாரில் கஞ்சா  விற்றுக் கொண்டிருந்த ராமகிருஷ் ணன் (25) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 2.50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.பாளை முருகன்குறிச்சி பகுதியில் போலீசாரின் சோதனையில் சட்ட விரோத மாக மதுவிற்ற அப்துல்ரகு மான் (28) என்பவரை கைது செய்து  அவரிடம் இருந்து 63 மதுபாட்டில் களை பறிமுதல் செய்தனர்.