திருப்பூர், ஆக.1– திருப்பூர் மாநகரில் ரூ.207 கோடி மதிப்பில் 2691 சாலைப் பணிகள் நடைபெற்று வருவ தாகவும், மழைக்காலத்துக்கு முன்பாக இப்ப ணிகள் நிறைவடைய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளதாகவும் மாநகர மேயர் ந.தினேஷ் குமார் கூறினார். திங்களன்று திருப்பூர் மாநகராட்சி மாமன் றக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடந்த மாமன்றக் கூட்டத்துக்குப் பிறகு நடை பெற்ற பணிகள் விபரங்களை மேயர் தினேஷ் குமார் தெரிவித்தார். அப்போது அவர் கூறிய தாவது: கடந்த மாமன்ற கூட்டத்திற்கு பிறகு 60 வார்டுகளில் மொத்தம் 2691 சாலை பணிகள் தொடங்கப்பட்டுள்ளது இதற்காக ரூ.207 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மழைக்காலத் துக்கு முன்பாக இந்த வேலையை முடிக்க திட் டமிடப்பட்டுள்ளது. நகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்கு நான்கு பாலங்கள் ரூ.36.36 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டுள்ளது. கோயில் வழியில் ரூபாய் 26 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கவும், அதை 14 மாதங்களில் முடிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நான்காவது குடிநீர் திட்டம் விடுபட்ட பல இடங்களில் இணைப்பதற்கு ரூ.48 கோடியில் டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் பணி கள் தொடங்கும். இத்துடன் வடக்கு தொகுதி யில் இரண்டு வார்டுகள், தெற்கு தொகுதியில் 44 மற்றும் 51 ஆகிய இரண்டு வார்டுகள் ஆகிய வற்றில் 24 மணி நேரமும் குடிநீர் வினியோ கம் செய்யும் திட்டம் தொடங்கப்பட உள் ளது. தெருவிளக்குகள் அமைக்கும் பணியில் 33 வார்டுகளில் எவ்வளவு விளக்குகள் தேவை என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள் ளது. 60 வார்டுகளிலும் கணக்கெடுத்து புதிய தெரு விளக்குகள் அமைக்கப்படும். 4497 சோடியம் விளக்குகள் மாற்றும் பணி விரை வில் தொடங்கும். விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைப்பதற்கு ரூபாய் 178 கோடியில் நிர்வாக அனுமதி பெறப்பட்டுள் ளது. மூன்றாவது மண்டலத்தில் பாதாள சாக் கடையில் அமைக்கும் பணி மேற்கொள்ளப் படும். மாநகராட்சியில் கொசு மருந்து தெளிக் கும் எந்திரங்கள் மொத்தம் 32 உள்ளன. மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக இவை அனைத்தும் பழுது நீக்கம் செய்யப் பட்டு தயார் நிலையில் உள்ளன. கூடுத லாக 32 கொசு மருந்து தெளிக்கும் இயந்திரங் கள் வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. இதன் மூலம் வார்டுக்கு ஒரு எந்திரம் என்ற முறையில் கொசு மருந்து தெளிக்கப் படும். கேரளா தடுப்பணை கட்டவில்லை கேரளா அரசு திருப்பூர் நான்காவது குடி நீர் திட்டத்திற்கு நீராதாரமாக திகழக்கூடிய பில்லூர் அணைக்கு மேல் பகுதியில் தடுப் பணை கட்டுவதாக அதிமுக புகார் கூறி யது. திருப்பூர் மட்டுமின்றி 18 குடிநீர் திட்டங் கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து செயல்ப டுத்தப்படுகிறது. எனவே இவ்விசயத்தில் நேர டியாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முறையில் முதல்வர், பொதுப்ப ணித்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரி களுக்கு கடிதம் எழுதப்பட்டது. அதில் பில் லூருக்கு மேலே நமக்கு நீராதாரமாக திகழும் பகுதியில் கேரள அரசு எந்த ஒரு தடுப்பணை யும் கட்டவில்லை, அத்தகைய எந்த ஒரு திட்ட மும் இல்லை என்பது தெரிவிக்கப்பட் டுள்ளது. அணைப்பாளைம் பகுதியில் பாலம் கட்டு வதற்கான மதிப்பீடு நீண்ட கால தாமதம் கார ணமாக ரூ.13 கோடியிலிருந்து தற்போது ரூ. 43 கோடியாக அதிகரித்து விட்டது. அந்தத் தொகையை அரசு வழங்கி உத்தரவிட்டுள் ளது. எனவே, அணைப்பாளையம் பாலம் பணி விரைவில் தொடங்கும். நல்லூர், காசிபாளை யம் வடிகால் மற்றும் அரசு மருத்துவமனை, சந்திராபுரம் வடிகால் அமைப்பு சாலை பணி கள் மழைக்காலத்துக்கு முன்பாக முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்.