districts

img

அரிசி ஆலையில் பதுக்கி வைத்திருந்த 1800 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

திருப்பூர், மார்ச் 12- திருப்பூர் அருகே அரிசி ஆலையில் பதுக்கி வைத்தி ருந்த 1800 கிலோ ரேசன் அரி சியை மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு  பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் காரத் தொழுவு பகுதியில் உள்ள தனியார் அரிசி ஆலையில் ரேசன் அரிசியை புதுப்பித்து வெளிமார்க் கெட்டில் விற்பனை செய்யப்படுவதாக திருப்பூர் மாவட்ட உணவு பொருட்கள் கடத் தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய  தகவல் கிடைத்தது. இதையடுத்து பறக்கும் படை தாசில்தார் சுந்தரம் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் காரத்தொழுவில் உள்ள தனியார் அரிசி ஆலையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 1800 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைக் கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதனை அதிகாரிகள் பறி முதல் செய்தனர். தொடர்ந்து அரிசி ஆலை உரிமையாளரிடம் அதிகாரிகள் விசாரணை  நடத்தி வருகின்றனர்.