districts

கடன் பெற்றவருக்கு ரூ.18 லட்சம் இழப்பீடு: நீதிமன்றம் உத்தரவு

நாமக்கல், டிச.13- தனியார் வங்கியின் சேவை குறை பாடு காரணமாக, லாரி வாங்க கடன் பெற்றவருக்கு ரூ18 லட்சம் இழப்பீடு வழங்க நாமக்கல் மாவட்ட நுகர் வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. நாமக்கல் மாவட்டம், நேதாஜி நக ரில் வசித்து வருபவர் ராமசாமி மகன் தங்கவேல். இவர், கடந்த 2018 டிசம்பர் மாதம் நாமக்கல்லிலுள்ள கோடக் மகேந்திரா வங்கியில் ரூ.26,54,028 லாரி வாங்க கடன் பெற்றுள்ளார். மாதாந்திர தவணை தொகையை செலுத்தி வந்த நிலையில், 2019 மார்ச் மாதத்தில் வங்கி ஆட்கள்  வாகனத்தை பறிமுதல் செய்து ஏலத் தில் விற்றனர். வங்கியின் நேர்மை யற்ற வணிக நடைமுறையால் தனக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு ரூபாய் 19 லட்சம் இழப்பீடு வழங்கி, தனது லாரியை திரும்ப வழங்க வங்கிக்கு உத்தரவிடு மாறு நாமக்கல் மாவட்ட நுகர்வோர்  நீதிமன்றத்தில், தங்கவேல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டுமுதல் நடைபெற்ற வந்த  வழக்கின் விசாரணை தற்போது முடி வடைந்த நிலையில், செவ்வாயன்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதி மன்ற நீதிபதி வீ.ராமராஜ் மற்றும் உறுப்பினர் ஆர்.ரமோலா ஆகியோர் தீர்ப்பளித்தனர். வங்கியில் கடன் பெற்று லாரியை  வாங்கிய பின்னர், ஒரு மாதத் தவ ணையை கூட வழக்கு தாக்கல் செய்த வர் செலுத்தவில்லை. இதனால் வங்கி முறையான அறிவிப்பு கொடுத்து லாரியை பறிமுதல் செய்துள்ளது. அதன் பின்னரும் கடன் பெற்றவ ருக்கு பணம் செலுத்த வங்கி வாய்ப்பு  கொடுத்துள்ளது. ஏலத்தில் விற்க விளம்பரம் செய்து லாரி விற்பனை செய்யப்பட்ட பின்னர், அந்த விவர மும் கடன் பெற்றவருக்கு வங்கி தெரி வித்துள்ளது. இந்த வகையில் வழக்கு தாக்கல் செய்தவர் கூறுவது உண்மை அல்ல என்றும், ஆனால், ரூபாய் 30  லட்சத்துக்கு மேற்பட்ட மதிப்பு கொண்ட லாரியை, வாங்கப்பட்ட ஆறே மாத காலத்திற்குள் ரூபாய் 14  லட்சம் குறைவாக ரூபாய் 16 லட் சத்துக்கு வங்கி ஏலம் பெற்றுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி வாகனம் வாங்கப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யும்போது, ஆண்டொன்றுக்கு பத்து சதவீதம் மதிப்பு மட்டுமே கழிக் கப்பட வேண்டும். ஆறு மாதத்தில் பாதி தொகைக்கு மேல் குறைத்து ஏலத்தில் லாரியை விற்றது சேவை குறைபாடு என்று நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், வழக்கு நிலுவையில் உள்ள போதே லாரியை விற்றது போக கடனுக்காக மீதம் ரூ.18 லட் சம் செலுத்த வேண்டும் என்று வங்கி,  வழக்கு தாக்கல் செய்தவருக்கு அறி விப்பு அனுப்பியுள்ளது. வங்கியின் சேவை குறைபாட்டிற்காக ரூ.18 லட் சத்தை வழக்கு தாக்கல் செய்தவ ருக்கு நான்கு வாரங்களுக்குள் வழங்கி, அவரது கடன் கணக்கை முடித்து, அசல் ஆவணங்களை வழக்கு தாக்கல் செய்தவருக்கு வழங்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத் தரவிட்டுள்ளது.