உதகை, ஜன.18- நீலகிரி மாவட்டத்தை உலகிற்கு காட்டிய ஜான் சல்லி வனின் 168 வது நினைவு தினம் கோத்தகிரியில் அனு சரிக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஜான் சல்விவன் 1815 முதல் 1830 வரை கோவை ஆட்சியராக பணியாற்றினார். இவர், கோவை ஆட்சியராக இருந்தபோது, அருகில் இருந்த மலைகளில் யாரேனும் வாழ்கிறார்களா என ஆய்வு மேற்கொண்டு சிறுமுகை காட்டு வழியாக கோத்தகிரி பகு தியை வந்தடைந்தார். அப்போது, அவருக்கு அங்கு வியப்பு காத்திருந்தது. மலைகளின் மீது பல வகையான பழங்குடி யின மக்கள் வாழ்வதை கண்டார். பின், இவர் நீலகிரி மாவட்டம் என்ற ஒரு இடம் உள்ளதை வெளிச்சம் போட்டு காட்டினர். கோவை மாவட்டத்துடன் இணைக்கப்பட்ட நீல கிரி மாவட்டத்தின் ஆட்சியராகவும், பிற்காலத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றினார். இதன்பின் ஐரோப்பிய நாடுகளில் இருந்து பல்வேறு வகையான பழங் கள், காய்கனிகள், மலர்கள், தானியங்கள் என பல்வேறு வகையான உணவு பொருட்களையும் அறிமுகம் செய் தார். மேலும், நீலகிரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு வகையிலும் இவர் பாடுபட்ட இவர், 1855 ஆம் ஆண்டு இவர் இங்கிலாந்தில் உயிரிழந்தார். இவர் முதன் முத லில் நீலகிரி மாவட்டத்திற்கு வந்த போது, தனக்கான வசிப் பிடம் ஒன்றை கோத்தகிரி கன்னேரிமூக்கு பகுதியில் கட்டி னார். அந்த கட்டிடம் தற்போது நினைவிடமாக மாற்றப்பட் டுள்ளது. இந்நிலையில், அவரின் 168 ஆவது நினைவு தினம் திங்களன்று கன்னேரிமூக்கு பகுதியில் அனுசரிக்கப்பட் டது. இதில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் கலந்துக் கொண்டு ஜான் சல்லிவனின் உருவ சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மணிகண்டன், கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.