15 ஆவது ஊதிய ஒப்பந்தந்தை பேசி முடிக்க வேண்டும் என வலியுறுத்தி சேலம் போக்குவரத்து தலைமை அலுவலகத்தில் சிஐடியு மண்டலத் தலைவர் செம்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சிஐடியு பொருளாளர் வி.இளங்கோ, போக்குவரத்து தொழிலாளர் சங்க மண்டல பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, விரைவு போக்குவரத்து சங்க மாநில துணைப் பொதுச்செயலாளர் முருகேசன், ஓய்வூதியர் சங்க மண்டலச் செயலாளர் அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.