districts

நூதன முறையில் ரூ.15.22 லட்சம் மோசடி

கோவை, ஆக.22- விமான நிலைய அதிகாரி என பேசி தங்க நகைகள் பார்சலில் வந்துள்ளதாக கூறி, பெண்ணிடம் ரூ.15.22 லட்சம்  மோசடி நடைபெற்றது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த  37 வயது பெண்ணுக்கு, முகநூல் (பேஸ்புக்) மூலமாக அறி முகமான நபர் ஒருவர், தனது பெயர் கிளிண்டன் எனவும், தான் லண்டனில் பிரபல கார் நிறுவனத்தில் விற்பனை மேலா ளராக பணியாற்றுவதாக அறிமுகப்படுத்தி கொண்டார். இதன்பின் அவர்கள் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு, வாட்ஸ் ஆப் மூலமாக பேசி வந்தனர். இதனைத் தொடந்து கிளிண்டன் தான் கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக தமிழ்நாடு வரவிருப்பதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர்,

நான் உங்களுக்கு பார்சலில் பல லட்சம் பெறு மானம் உள்ள தங்க நகைகளை அனுப்பி வைப்பதாகவும், அதனை பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார். சில  நாட்கள் கழித்து, அந்த பெண்ணை தொடர்பு கொண்ட  ஒருவர், தில்லி விமானநிலையத்தில் இருந்து பேசுவதாகவும்,  உங்களுக்கு லண்டனில் இருந்து கிளிண்டன் என்பவர் தங்க  நகைகளை பார்சலில் அனுப்பியுள்ளார். அதற்கு வரி,  விமான செலவு உட்பட சட்ட வழிமுறைகளுக்கு ரூ.32 ஆயிரம்  பணம் அனுப்பி வைக்குமாறும் கேட்டு கொண்டனர். இதன்பின்னர் தொடர்பு கொண்ட அதே நபர் பல்வேறு காரணங்களை கூறி தங்க நகைகளை கோவைக்கு அனுப்பி  வைக்க வேண்டுமானால், மேலும் பணம் செலவாகும் என  தெரிவித்துள்ளார். இதனை உண்மை என நம்பிய அந்த  பெண் பல்வேறு கட்டங்களாக அந்த நபர் கூறிய வங்கி  கணக்கிற்கு ரூ.15.22 லட்சம் அனுப்பியுள்ளார். ஆனால்,  அந்த நபர் சொன்னபடி தங்க நகைகள் பார்சலில் வரவில்லை.  மீண்டும் அவர்களை தொடர்பு கொள்ள முயன்றபோது, செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால்  அதிர்ச்சியடைந்த அந்த பெண் கோவை மாநகர குற்றப் புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடு பட்ட நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின் றனர்.