உடுமலை, அக். 17- கேரள மாநிலத்தில் நடைப்பெற்ற 14 ஆவது தேசிய அளவிலான களரி போட்டியில் தமிழகம் 2 ஆம் இடம் பெற்றுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 14 வது தேசிய அளவிலான களரி போட்டிகள் நடைப்பெற்றது. இதில் 14 மாநிலங்கள் கலந்து கொண்டன. முதலிடம் கேரள மாநில மும், இரண்டாம் இடத்தை தொடர்ந்து ஐந்தா வது முறையாக தமிழகம் பெற்றுள்ளது. இதில் தமிழ்நாடு களரிப் பயிட்டு அசோ ஷியேசன் சார்பில் ஆசான் வீரமணி தலைமை யில் 52 பேர் கலந்து கொண்டனர். சப் ஜூனியர் பிரிவில் சவட்டுக்கல் பெண்கள் பிரி வில் கனிஷ்கா, மாணவர்கள் பிரிவில் சுர்ஜித் ஜூனியர் பாய்ஸ் மெய்பயிட்டு பத்மேஷ்ராஜ், ஜூனியர் பாய்ஸ் சவட்டுட்டுக்கல் இன்பத் தமிழன் மற்றும் உரிமி வீசுதல் ஜீவா வெண்கல பதக்கமும், ஜூனியர் பெண்கள் மெய்ன்ப யிட்டு பிரிவில் ஈசா வெள்ளி பதக்கம், சீனியர் பாய்ஸ் சவட்டுக்கல் ரஸ்வந்த் ஆகியோர் வெண்கல பதக்கம் பெற்றனர். இவர்களுக்கு கேரளா போக்குவரத்து துறை அமைச்சர் அந் தோணி ராஜ் பதக்கங்களை வழங்கினார். வெற்றி பெற்ற களரி வீரர்களுக்கும் சிலம்ப ஆசான் வீரமணி மற்றும் பயிற்சியா ளர்களுக்கும் உடுமலை நூலகம் எண் இரண்டு நூலக வாசகர் வட்டம் மற்றும் பயிற்சி மாணவர்களின் பெற்றோர் வாழ்த்து தெரி வித்தனர்.