உடுமலை, ஜன.9- தொழிலாளர்களை பழிவாங் கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ஜெயின் இரிகேசன் சிஸ்ட்ம்ஸ் லிட் நிறுவனத்தை கண்டித்து, தொழிலா ளர்கள் 14 ஆவது நாளாக உள்ளிருப் புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுகா, எலையமுத்தூர் பகுதியில் ஜெயின் இரிகேசன் சிஸ்டம்ஸ் லிட் என்ற விவசாய பொருட்கள் தயாரிக் கும் நிறுவனத்தில் 100க்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு வேலை செய் யும் தொழிலாளர்களுக்கு முறை யாக சம்பளம் வழங்காமலும், தொழிலாளர் சட்டங்களை முறை யாக அமல்படுத்தாமல் இருந்த நிலையில், சிஐடியு தொழிற்சங்கத் தின் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக சம்பளம் உள்ளிட்ட சட்ட சலுகைகள் பெறப்பட்டது. இந்நிலையில், தொழிற்சங்கத்தில் சேர்ந்தார்கள் என்ற காரணத்திற் காக தொழிலாளர்களை பழிவாங் கும் நோக்கில் இந்நிறுவனத்திற்கு சொந்தமான மாநிலத்தின் பல பகுதிகளுக்கு அனுபவம் இல்லாத வேலைகளுக்கு 29 தொழிலா ளர்களை பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளது. தொழி லாளர்களை பணி மாறுதல் செய்த நிர்வாகத்திடம் தொழிற்சங்கத்தின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித பயனும் இல்லாமல் போன தால், நிறுவனத்தின் உள்ளே அமை தியான முறையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தொழிலாளர்க ளின் நியாயமான போராட்டம் அரசிற்கும், நிர்வாகத்திற்கும் தெரி விக்கும் வகையில் நிறுவனத்தின் முன்பு தொழிலாளர்களின் குடும் பங்களுடன் தர்ணா போராட்டம், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தின் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப் பாட்டம் என பல வடிவங்களில் போராட்டம் நடத்தியும். கடந்த 14 நாட்களாக நிறுவனத்தின் நடவடிக் கையில் எவ்வித மாற்றமும் இல்லை. கடுமையான உறைபனி காலத்தில் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் தொழிலா ளர்களுக்கு உடல் ரீதியான பல பிரச்சனைகள் எற்பட்டு வருவதை தொழிலாளர் துறையும், மாவட்ட நிர்வாகமும் கவனத்தில் கொண்டு சரியான நடவடிக்கை எடுக்க வேண் டும் என்பது தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.