சேலம், ஜூன் 4- சேலம் மாவட்டத்தில் ரூ.136.40 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம் பாட்டு வாரிய மேலாண்மை இயக்கு நர் பொ.சங்கர், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம் பாட்டு வாரியத்தின் மூலம் சேலம் மாநகராட்சி, அஸ்தம்பட்டி, வார்டு 12 மணக்காட்டில் ஆதிதிராவிட மக்க ளுக்கு, திடீர் நகர் திட்டப்பகுதியில் 636 குடியிருப்புகள் ரூ67.86 கோடி யில் கட்டப்பட்டு வருகிறது. இதில் ஒரு வீட்டிற்கான மதிப்பீடு ரூ.10.67 லட்சம் ஆகும். மேலும், அம்மாப் பேட்டை வார்டு 44, காந்தி நகர் திட்டப் பகுதியில் 280 மறுகட்டுமான குடி யிருப்புகள் ரூ28.56 கோடியில் கட் டப்பட்டு வருகிறது. இதில் ஒரு வீட் டிற்கான மதிப்பீடு ரூ.10.02 லட்சம் ஆகும். கொண்டலாம்பட்டி வார்டு 45, நேரு நகர் திட்டப்பகுதியில் 392 மறு கட்டுமான குடியிருப்புகள் ரூ.39.98 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. இதில் ஒரு வீட்டிற்கான மதிப் பீடு ரூ.10.02 லட்சம் ஆகும். ஒவ் வொரு குடியிருப்புகளும் 400 சதுர அடி பரப்பளவுடன் அமைந்துள்ளது. குறிப்பாக, ஒவ்வொரு வீட்டிலும் ஒரு வரவேற்பு அறை, படுக்கை அறை, சமையல் அறை, குளியல் அறை மற்றும் கழிவறை ஆகியவற்றுடன் கூடிய அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் மானியத்தொகை கழித்து, மீதி தொகையினை பயனாளிகள் பங்கு தொகையாக செலுத்த வேண் டும். குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம் பாட்டு வாரியத்தின் மூலம் ரூ.136.40 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரு கிறது. இப்பணிகள் குறித்து தமிழ் நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் பொ.சங்கர் ஆய்வு செய்தார். அப் போது, திட்டப்பணிகளை குறித்த காலத்திற்குள் விரைந்து முடித்து பயனாளிகளுக்கு வழங்க வேண்டு மென அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது கோவை சரக மேற்பார்வை பொறியாளர் எஸ்.ஜெகன்னாதன், சேலம் கோட்ட நிர்வாகப் பொறியா ளர் சி.விஜயமோகன், உதவி நிர்வாக பொறியாளர் எஸ்.செந்தில்வேல், உதவிப்பொறியாளர்கள் எம்.பாண்டி யன் மற்றும் எம்.வேல்மோகன் உள் ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.