districts

img

ஊரை விட்டு ஒதுக்கி வைத்த கட்டப்பஞ்சாயத்து கும்பல்

தருமபுரி, ஜூன் 26- பூச்செட்டிஅள்ளி கிராமத்தில் நிலப்பிரச் சனை காரணமாக கட்டப்பஞ்சாயத்து கும்பல் 13 குடும்பத்தை ஊரைவிட்டு ஒத்திவைத்தாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.  இதுகுறித்து அவர்கள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது, தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், பூச்செட்டி கிராமத் தில் கார்த்திகேயன் ஆகிய நான் வசித்து வருகிறேன். எங்களுடைய பூர்விக குடும்ப  நிலத்தில் எனக்கும் சின்னபையன் என்பவருக் கும் பிரச்சனை இருந்து வந்தது. எனக்கு நியா யம் கிடைக்க நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடுத்தேன். நீதிமன்றத்தில் எனக்கு சாதக மாக தீர்ப்பு கிடைத்தது. இந்த தீர்ப்பை பூச் செட்டிஅள்ளி கிராம முக்கியதர்களிடம் காண் பித்தும் அவர்கள் தீர்ப்புக்கு எதிராக, எதிரிக்கு நிலத்தை விவசாயம் செய்ய அனுமதிக்கின்ற னர். இதை நாங்கள் எதிர்த்ததால், எங்களுக்கு ஆதரவாக உள்ள 13 குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துவிட்டதாக, ஊர் கட்டப் பஞ்சாயத்து கும்பல் முடிவு செய்துவிட்ட னர்.  மேலும், எங்களுக்கு சொந்தமான நிலத்தை கொடுக்கவில்லை என்றால் உங் களை குடும்பத்துடன் கொளுத்தி விடுவோம் என மிரட்டுகின்றனர். மேலும், எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். பூச்செட்டி கிராமத் திலிருந்து யாரையும் என் தந்தை சாவுக்கு வர, கட்டப்பஞ்சாயத்து கும்பல் அனுமதிக்க வில்லை. எங்கள் குடும்பங்களில் இருந்து  வருபவர்களுக்கு கூலிவேலை செய்ய அனு மதிப்பதில்லை, எனது உறவினருக்கு மாப் பிள்ளை பார்க்க வந்த பெண் வீட்டாரிடம் இவர்களை நாங்கள் ஊரைவிட்டு தள்ளி வைத்துள்ளோம் ஆகவே இவர்களுக்கு பெண் தராதீர்கள் என கட்டப்பஞ்சாயத்து கும் பல் பேசி திருப்பி அனுப்பியுள்ளனர்.  ஊர் கட்டப்பஞ்சாயத்து கும்பலின் தொந் தரவால் நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ளும் நிலமைக்கு தள்ளப்பட் டுள்ளோம், எனவே நீதிமன்ற தீர்ப்பின்படி எங்கள் நிலத்தை மீட்டுத்தர வேண்டும். கட்டப் பஞ்சாயத்து கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் ஊருடன் ஒன்றாக வாழ  நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரி வித்துள்ளனர்.