மேட்டுப்பாளையம், நவ.25- கனமழையால் மேட்டுப்பாளையத் தில் 12 வீடுகள் சேதமடைந்தது குறித்து வட்டாட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண் டார். கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப் பாக இரவு நேரங்களில் அதிகப்படியாக கனமழை பெய்கிறது. மேட்டுப்பாளை யம் தாலுகாவில் மட்டும் 12 வீடுகள் கனமழை காரணமாக சேதமடைந் துள்ளதாக மேட்டுப்பாளையம் வட் டாட்சியர் சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், மேட்டுப் பாளையம் தாலுகாவில் கடந்த 3 நாட்க ளுக்கு முன்பு 37 செ.மீ. மழை பெய்தது. இதனால், அங்குள்ள 100க்கும் மேற் பட்ட குளம், குட்டைகள், தடுப்பணை கள் நிரம்பி தண்ணீர் வெளியேறி வரு கின்றன. பல விவசாய நிலங்களில் தண் ணீர் வெளியேற வழியின்றி தேங்கி யுள்ளது. குறிப்பாக மேட்டுப்பாளை யம் நகராட்சி, சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் 4 வீடுகள், சிக்காரம் பாளையம் ஊராட்சியில் 4 வீடுகள், மூடு துறை மற்றும் கெம்மா ரம்பாளையம் ஊராட்சிகளில் தலா ஒரு வீடுகள், மரு தூர் ஊராட்சியில் ஒரு வீடு என மொத் தம் 12 வீடுகள் சேதமாகியுள்ளன. இது தொடர்பாக வருவாய்த்துறை சார்பில் அறிக்கை தயார் செய்து, மாவட்ட நிர் வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள் ளது. மேலும், சேதமடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தர நடவ டிக்கை எடுக்கப்படும், என்றார்.