districts

img

கேரளாவுக்கு கடத்த முயன்ற 1100 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

பொள்ளாச்சி, பிப்.28- ஆனைமலை அருகே கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 1100 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட் டது. பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியில் சனி யன்று குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மீன்கரை சாலை காந்தி ஆசிரமம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்த போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது காரிலிருந்து இறங்கிய ஓட்டு நர் காவல் துறையினர் பிடியிலிருந்து தப்பியோடினார். இதையடுத்து காரில் சோதனை மேற்கொண்ட போது, அதில் சுமார் 50 கிலோ எடையில், 22 சாக்கு மூட்டைக ளில் 1,100 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து ரேசன் அரிசியையும், காரையும் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற விசார ணையில், ரேசன் அரிசி கடத்தி வந்தது ஆனைமலையைச் சேர்ந்த கனகராஜ் என்பது தெரியவந்தது. மேலும், இவர் பல்வேறு இடங்களில் ரேசன் அரிசியை சேகரித்து கேரளா வுக்கு கடந்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து கனகராஜ் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.