திருப்பூர், ஏப். 22 - திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே திருச்சி - கோவை நெடுஞ்சாலையில் உள்ள கண்ணபுரத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில், சித்ரா பவுர்ணமியையொட்டி விக் கிரம சோழீஸ்வரர் கோவில் தேரோட்டம், மாரி யம்மன் கோயில் பொங்கல் திருவிழா நடை பெறும். இதில் பழமை வாய்ந்த மாரியம்மன் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 1000 ஆண்டுகள் பழமையான மாட்டுச் சந்தையும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த புதன்கி ழமை பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இதனை ஒட்டி கடந்த புதன்கிழமை முதல் மாட்டுச் சந்தையும் கூடியது. இந்த மாட்டு சந் தைக்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய பகுதியில் இருந்து விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். அம்மாநிலங்களில் இருந்து இங்கு வந்து மாடுகளையும் வாங் கிச் செல்வர். இந்த ஆண்டு கண்ணபுரம் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா வருகிற மே 4 ஆம் தேதியும்,.5 ஆம் தேதி மாலை விக்கிரம சோழீஸ்வரர் கோயில் சித்ரா பவுர்ணமி தேரோட்டமும் நடைபெற உள்ளது.
பத்தாம் நுற்றாண்டில் (1088) அபிமான சோழ ராசாதி ராசன் காலத்தில் விக்கிரம சோழீஸ்வரர் கோயில் கட்டப்பட்டு, வீர ராசேந்திர சோழனால் இக்கோயிலுக்கு கொடை வழங்கப்பட்டும், உழவர்கள், வணி கர்களுக்கு வரி விதிக்கப்பட்டு விக்கிரம சோழீஸ்வரர் கோயில் தைப்பூச விழாவும், தினப் பூசைகளும், இதர திருவிழாவும் நடந் ததற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. மேலும் சேரர்களின் முசிறி (கேரளா) துறை முகம் முதல் சோழர்களின் பூம்புகார் துறைமு கம் வரை செல்லும் இராசகேசரி பெருவழி பாதையில் அமைந்துள்ள இக்கோயிலும், இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் மாட்டுச் சந்தையும் 1000 ஆண்டுகள் பழமையான தாகும்.
கொரோனாவுக்கு பின் கடந்த ஆண்டு கூடிய சந்தையை காட்டிலும், இந்த ஆண்டு மாடுகள் வரத்து அதிகமாகியுள்ளது. மேலும் புதுக்கோட்டை, திருவாரூர், திருச்சி, பெரம்ப லூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மற் றும் பொதுமக்கள் மாடுகள் வாங்க வந்துள்ள னர். இந்த மாட்டுச் சந்தைக்கு இதுவரை தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகு தியில் இருந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற் பட்ட மாடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த மாட்டுச்சந்தையில் விவசாயிகள் நாட்டு மாடு, கன்று குட்டி, காளைகளை வாங்கிச் செல்கிறார்கள். நாட்டு மாடுகளுக்கு என கடந்த 1000 ஆண்டுகளாக நடைபெறும் ஒரே சந்தை இது என்றும் வியாபாரிகள் கூறி னர். இந்த ஆண்டு மாட்டுச் சந்தையை காண பொது மக்கள் விவசாயிகள் பலரும் குடும்ப மாக வந்து செல்கின்றனர். இங்கு 6 மாத இளங் கன்றுகள் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையும், நாட்டு பசு மாடுகள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1.25 லட்சம் வரையும், ஒரு சோடி காளைகள் ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1.5 லட்சம் வரையும், இனவிருத்திக் காளைகள் ரூ.1 லட் சம் முதல் ரூ.1.60 லட்சம் வரையும் விற்ப னைக்கு வந்துள்ளன. இச்சந்தையை ஒட்டி கோயிலின் முன்பாக மாடுகளுக்கான கயிறு கள், மணிகள், குஞ்சம், சாட்டை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மாடு வாங்க வரும் விவசாயிகள் மாடுகள் வாங்க முடியா விட்டாலும், சாட்டையை வாங்கி செல்வதும், மாடு வாங்கும் விவசாயிகள் நேர்த்தி கடனாக மாரியம்மனுக்கு மொட்டை அடித்து கோயில் முன்பாக மாடுகளுக்கு பூஜைகள் செய்து கொண்டு செல்வது மரபாக உள்ளது.