திருநெல்வேலி, மே 5-நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் இந்தாண்டு 100 எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிக்க இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் தற்போது அக்கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்புக்கான இடங்கள் 250-ஆக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் மதுரை மருத்துவக் கல்லூரியில் 95 இடங்களையும், நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் 100 இடங்களையும் அதிகரிக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் மருத்துவக்கல்வி இயக்குநரகம் விண்ணப்பித்திருந்தது. புதிதாகத்தொடங்கப்பட்டுள்ள கரூர் கல்லூரிக்கு 150 இடங்களைஅளிக்குமாறு அனுமதி கோரப்பட்டது.அதன்பேரில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மருத்துவக் கல்லூரிகளுக்குச் சென்று ஆய்வு நடத்தினர். அதில் முதல்கட்டமாக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களை அதிகரிக்க இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள் ளது. வரும் கல்வி ஆண்டில் இது குறித்து அறிவிக்க வாய்ப்புள்ளதாக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் கண்ணன் தெரிவித்தார்.இது தவிர கரூர் மருத்துவக் கல்லூரிக்கு 55 மருத்துவ அலுவலர்களை நியமிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.