தருமபுரி, பிப்.19- வேளாண் பொறியியல்துறை மூலம் 621 விவசாயிகளுக்கு ரூ.10.57 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங் கப்பட்டுள்ளதென தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வேளாண்மை பொறி யியல் துறையின் மூலமாக மண் வளத் தினை மேம்படுத்திடவும், நீர் ஆதாரத் தினை உருவாக்கிடவும், வேளாண் உற் பத்தியினை பெருக்கிடவும் பல்வேறு வேளாண் திட்டங்கள், நவீன தொழில் நுட்பங்கள் செயல்படுத்தப்பட்டு வரு கின்றன. இத்துறையின் மூலமாக நீர் மேலாண்மை, வேளாண்மை இயந்திர மயமாக்கல், அறுவடைக்கு பின் தொழில் நுட்பம், சூரிய உலர்த்தி மற்றும் மின் மோட்டார் மானியத்தில் விவசாயிக ளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் இத் துறையின் சார்பில், மொத்தம் 621 விவ சாயிகளுக்கு ரூ.10.57 கோடி மதிப்பீட் டில் வேளாண் உபகரணங்கள் உள் ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இத்து றையின் பல்வேறு திட்டங்கள் தொடர் பான விவரங்களுக்கு உதவி செயற்பொறி யாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, மாவட்ட ஆட்சியர் வளாகம், தருமபுரி (தொலைபேசி எண்: 04342 296132) மற்றும் உதவி செயற்பொறியா ளர், வேளாண்மைப் பொறியியல் துறை, ஒழுங்குமுறை விற்பனை கூட வளா கம், திருப்பத்தூர் மெயின்ரோடு, அரூர் (தொலைபேசி எண்: 04342 296077) அலு வலகங்களை தொடர்பு கொண்டு பயன டையலாம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.