உதகை, செப்.20- நீலகிரியில் கடந்த 40 நாட்களில் 10 புலிகள் பல்வேறு காரணங்களால் இறந் துள்ளதாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ் தெரிவித் துள்ளார். இதுதொடர்பாக அவர் உதகையில் வியாழனன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், முதுமலை புலிகள் காப்ப கம், சீகூர் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதி களில் 6 புலிக்குட்டிகளை தாய் விட்டு சென்ற நிலையில் இறந்துள்ளதாகவும், நடுவட்டம், கார்குடி ஆகிய பகுதிகளில் 2 புலிகள் மற்ற புலிகளுடன் சண்டை யிட்டதால் ஏற்பட்ட காயத்தால் இறந்துள் ளன. எமரால்ட் பகுதியில் இறந்த ஒரு புலி விஷம் வைத்து கொல்லப்பட்டி ருக்கலாம் என்றும், மற்றொரு புலி காயம் காரணமாக இறந்துள்ளன. குறிப் பாக, சின்ன குன்னூர் பகுதியில் மீட்கப் பட்ட 4 புலிக்குட்டிகள் சீகூர் வனப்பகுதி யில் இருந்து, சின்ன குன்னூர் பகுதிக்கு இடம் பெயர்ந்து வந்துள்ள T234 என்ற பெண் புலியின் குட்டிகளாக இருக்க லாம். அந்த புலி 2021 ஆம் ஆண்டு சீகூர் வனப்பகுதியில் தென்பட்டதாகவும், தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு கடநாடு வனப்பகுதியில் தென்பட்ட நிலையில் அதன் 4 குட்டிகளை கடந்த செப்.14 ஆம் தேதியன்று முதல் விட்டு சென்றது ஏன்? என்பதை உறுதி செய்ய அப்பகுதியில் கிடைத்த புலியின் எச்சம், வேட்டையா டிய கடமானின் மாமிசங்கள் ஆய்வுக் காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முடி வுகள் வந்த பிறகு தான் தாய் புலி குறித்து உறுதி செய்யபடும், என்றார். மேலும் தாய் புலியை கண்டுபிடிக்க 10க்கும் மேற்பட்ட இடங்களில் நவீன கேமராக்கள் பொறுத்தபட்டு, தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. மேலும், நீலகிரி வனக்கோட்டத்தில் 52 புலிகள் உள்ளதாலும், கொல்லை கும்பல் அச்சு றுத்தல் காரணமாகவும், அவலாஞ்சி, எமரால்டு, போர்த்தி மந்து உள்ளிட்ட வனப்பகுதிகளில் புதிதாக வேட்டை தடுப்பு முகாம்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நீலகிரியில் கடந்த 40 நாட்களில் 10 புலிகள் பல்வேறு காரணங்களால் இறந்துள்ளன. முது மலை புலிகள் காப்பகத்தை போலவே ஒவ்வொரு ஆண்டும் நீலகிரி வனக்கோட் டத்திலும் புலிகள் கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.