districts

உக்ரைனுக்கு சென்ற 20 மாணவர்களில் 10 பேர் தாயகம் திரும்பினர் நீலகிரி மாவட்ட நிர்வாகம் தகவல்

உக்ரைனுக்கு சென்ற 20 மாணவர்களில் 10 பேர் தாயகம் திரும்பினர் நீலகிரி மாவட்ட நிர்வாகம் தகவல் உதகை, மார்ச் 8- உக்ரைன் மற்றும் ரஷ்யா நாட்டிற்கு இடையே போர் நடை பெற்று வரும் நிலையில், அங்கு படித்து வரும் இந்தியா நாட்டை சேர்ந்த மாணவர்கள் நாடு திரும்ப முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனிடையே உக்ரைனில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களை மீட்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு  வருகிறது. இதனடிப்படையில், உக்ரைனில் படித்து வரும் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 20 மாணவர்களின் விவரங் களை சேகரித்து மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வரு கிறது. இதுவரை 10 பேர் நீலகிரிக்கு திரும்பி உள்ளனர். இவர் களில் மீதமுள்ளவர்களில் பெரும்பாலானோர் உக்ரைனில் போர் பதற்றம் அதிகமுள்ள கார்கீவ் உள்ளிட்ட பகுதி களில் உள்ளதாகவும், அவர்களை பாதுகாப்பாக அழைத்து  வர இந்திய வெளியுறவுத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. சிலர் தற்போது போலந்து நாட்டில் காத்தி ருக்கின்றனர். விமானம் மூலம் சொந்த தாயகம் அழைத்து வர தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வா கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.