கோவை, ஜூலை 11- 10 லட்சம் மாணவர்கள் அரசுப்பள்ளி களை தேடி வந்துள்ளதாகவும், மேலும், சேர்க்கை நடைபெற்று வருவதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். கோவை, நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில், “நம்ம ஊரு பள்ளி” திட்டத்தின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசுகையில், பள்ளியின் கழிவறை எப்படி இருக்கிறதோ? அப்படித்தான் பள்ளிக் கூடமும் இருக்கும் என நம்புபவன் நான். இந்த திட்டம் ஆரம்பிக்கும் போது 12 நிறுவ னங்கள் தான் இருந்தது. தற்பொழுது 132 நிறுவனங்கள் இணைந்துள்ளன. தனியார் பங்களிப்புடன் ஸ்மார்ட் வகுப்புகள் அரசுப் பள்ளிகளுக்கு கிடைப்பது மகிழ்ச்சி அளிக் கிறது, என்றார். இந்நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். இதன்பின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறு கையில், கடந்தாண்டு நவம்பர் மாதம் சென் னையில் இத்திட்டம் துவங்கப்பட்டு, கடந்த 6 மாதங்களில் 7 ஆயிரத்து 294 பள்ளிகளுக்கு என்னென்ன தேவைகள் உள்ளது என கேட்டறிந்து, அவை சென்றடைந்திருக் கின்றன. இதனை தொடர்ந்து நாம் அதிகப் படுத்த வேண்டும். இன்றைய தினம் (செவ்வா யன்று) மட்டும் ரூ.13.95 கோடி பங்களிப்பு வந்துள்ளது. இதனை கொண்டு ஒவ்வொரு பள்ளியையும் மேம்படுத்த வேண்டும். அர சாங்கத்தினுடைய இந்த திட்டத்தினை ஊடக வியலாளர்கள் வெகுவாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தரப் பில் 9 தனியார் பள்ளிகளுக்கு சாதி, மதம் குறித்து மாணவர்களின் பதிவேட்டில் குறிப் பிடக்கூடாது என்று கடிதம் அனுப்பப்பட் டுள்ளது, இது மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நடைமுறைப்படுத்தப் படுமா என்ற கேள்விக்கு, மாவட்ட அளவில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதால், இதுவரை நான் அதனை பார்க்கவில்லை. அதனை ஆராய்ந்த பின்பு நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என தெரிவித்தார். அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை யை பொறுத்தவரை கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு 10 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளை தேடி வந்துள்ளனர்.
ஆகஸ்ட் மாதம் வரை சேர்க்கையின் கடைசி நாள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், கடைசி நாள் முடிந்த பின்பு எத்தனை சதவிகிதமானவர்கள் அரசுப்பள்ளிகளில் சேர்ந்துள்ளார்கள் என்பது குறித்து தெரிவிக்கப்படும். முதல மைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட மாண வர்களுக்கு பள்ளி வருகையில் விடுப்பு போடப்பட்டுள்ளது குறித்து ஆய்வு மேற் கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். நீண்ட நாட்களாக பணி யாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பணி மாறு தல் வழங்கப்படுவது குறித்தான கேள்விக்கு, என்ஓசி வரும்போது அது குறித்தான நடவ டிக்கை மேற்கொள்ளப்படும் என பதில ளித்தார். கொரோனா காலத்திற்குப் பின்பு நிதி சுமைகள் அதிகமாக உள்ளதால், அவற் றையெல்லாம் களைந்து, லேப்டாப் ஆக அளிக்கலாமா? அல்லது டேப்லெட்டாக கொடுக்கலாமா? என்பது குறித்து தெரி விக்கப்படும். உளவியல் மருத்துவர்கள் தமிழ் நாட்டில் போதுமான அளவிற்கு உள்ளார் கள். மேலும் தேவைப்பட்டால் அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். மலைவாழ் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் வசதிகள் குறைவாக உள்ளது குறித்த கேள்விக்கு, அதில் இரண்டு துறைகள் வரு கிறது. அவர்கள் வெவ்வேறு கருத்துகளை கூறுவதால் கலந்தாலோசித்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ் வாறு அமைச்சர் தெரிவித்தார்.