கோவை, மே 24- தமிழ்நாட்டில் சிறுதானியங்கள் பயிரிட ஊக்கவிக்கப்பட்டு வருவதாகவும், 10 லட் சம் ஹெக்டர் பரப்பளவில் சிறு தானியம் பயிர் செய்யப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல் வம் கோவையில் தெரிவித்தார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழ கத்தில் சர்வதேச சிறுதானிய கருத்தரங்கு மற்றும் எதிர்காலம் சார்ந்த சிறுதானிய உணவுப் பொருட்கள் கண்காட்சி நடைபெற் றது. இதனை, தமிழக,வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களி டம் அமைச்சர் பேசுகையில், கண்காட்சியில் புதிய ரக சிறு தானியங்கள், விவசாயிகளுக்கு அதிக லாபம் தரக்கூடிய விதைகள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. சிறு தானியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தமிழகத்தில் சிறுதானியங் கள் பயரிட ஊக்கவிக்கப்பட்டு வருகிறது. 10 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் சிறு தானியம் பயிர் செய்யப்படுகிறது. 38.2 மெட்ரிக் டன் சிறு தானிய உற்பத்தி இலக்கு நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. வேளாண்மை பல்கலைக்கழகத் தில் புதிய ரகங்கள், அதிக லாபம் தரக்கூடிய பயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் புதிய பயிற்சியை மேற் கொள்ள ஆராய்ச்சி மாணவர்களை அனுப் பும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. துபாய், கனடா போன்ற நாடுகளில் மாணவர்கள் அங் குள்ள புதிய முறைகள் அறிந்து பயிலக்கூடிய பயிற்சி மேற்கொள்ள வசதியாக இந்த திட் டம் பல்கலைக்கழகத்தில் துவங்கப்பட்டுள் ளது. இந்தாண்டு 50 கோடி ரூபாய் தமிழக அர சால் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சிறு தானிய வளர்ச்சிக்காக தரமான விதைகள் உள்ளிட்ட செயல்பாட்டிற்காக ரூ.82 கோடி அர சால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, என் றார். முன்னதாக, கருத்தரங்க நிகழ்ச்சியில் வேளாண்மைத் துறை சார்ந்த ஓய்வு பெற்ற விஞ்ஞானிகளுக்கு அமைச்சர் நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்தார். இதில் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி, கல்லூரி முதல்வர் வெங்க டேச பழனிச்சாமி, சிறுதானியத்துறை தலை வர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்ட னர்.