சென்னை, டிச.6 - மிக்ஜம் புயல் வெள்ள நிவாரணப் பணிக்கு சென்னை வரும் வழியில் விழுப்புரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த சுகாதார அலுவலர் குடும் பத்தினருக்கு ஆறுதல் மற்றும் ரூ.10 லட்சம் நிதியு தவி முதல்வர் மு.க.ஸ்டா லின் அறிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப் பில், மிக்ஜம் புயல் வெள்ள நிவாரணப் பணியை மேற் கொள்வதற்காக விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சியைச் சேர்ந்த சுகா தார அலுவலர் ஜெயபால் மூர்த்தி சென்னைக்கு வரும் வழியில் விழுப்புரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயர மான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந் தேன். இந்த விபத்தில் உயிரி ழந்த ஜெயபால் மூர்த்தி குடும்பத்தினருக்கும், அவருடன் பணிபுரிபவர்கள் ளுக்கும் எனது ஆறுதலை யும், ஆழ்ந்த இரங்கலை யும் தெரிவித்துக் கொள்வ தோடு, அவரது குடும்பத் திற்கு முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்க உத்தர விட்டுள்ளேன். மேலும், அவரது குடும்பத்தில் தகுதி வாய்ந்த ஒருவருக்கு உடனடி யாக அரசு பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். மேலும் இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரும் ஓட்டுநர் முருகானந் தத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என முதல்வர் ஸ்டாலின் தெரி வித்துள்ளார்.