districts

காஷ்மீருக்கு கூடுதலாக 10,000 ராணுவ வீரர்கள் மத்திய அரசு நடவடிக்கையின் பின்னணியில் உளவுத் துறை?

புதுதில்லி, ஜூலை 28- பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் மிகப் பெரிய தாக்குதலை நடத்த திட்டம் தீட்டியிருப்பதன் காரணமாக காஷ்மீருக்கு கூடுதலாக 10,000 ராணுவ வீரர்களை மத்திய அரசு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீர் பகுதியில் ஏற்கெனவே சுமார் 60,000 வீரர்கள் பயங்கரவாதத்துக்கு எதிரான பாதுகாப்புப் பணியிலும், அமர்நாத் யாத்திரை பாதுகாப்புப் பணிக்காக சுமார் 20,000 வீரர்களும் ஈடுபட்டுள்ள நிலையில், கூடுதல் வீரர்களை மத்திய அரசு அனுப்பி யுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி கள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய அரசுக்கு தகவல் கிடைத்துள்ள தாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, காஷ்மீருக்கு கூடுதலாக 10,000 ராணுவ வீரர்களை அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர்  அஜீத் தோவல், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவ தாக வெளியான தகவல் குறித்து ஆலோசனை நடத்தி யுள்ளார். இந்த ஆலோசனையின் முடிவிலேயே காஷ்மீ ருக்கு கூடுதலாக ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.