நாமக்கல், மே 30- கொல்லிமலையில் ரூ.1 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில் பிரேத பரிசோதனை கூடம் அமைக்கப்படும் என மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம், கொல்லி மலை, செம்மேடு அரசு மருத்துவமனை யில் ரூ.47 லட்சம் மதிப்பில் ரத்த வங்கி மையம் திறப்பு விழா திங்களன்று நடை பெற்றது. சுகாதார பணிகள் துணை இயக் குநர் பூங்கொடி வரவேற்றார். வனத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன், நாமக் கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி. சின்ராஜ், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் பொன்னுசாமி, ராமலிங் கம், மாவட்ட வருவாய் அலுவலர் மணி மேகலை, நாமக்கல் மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ரத்த வங்கி மையத்தை திறந்து வைத்தார். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணி யன் பேசுகையில், மலைவாழ் மக்கள் ரத்ததானம் செய்ய முன் வர வேண்டும்.
கொல்லிமலை பகுதியில் பிரேத பரிசோ தனை கூடம் அமைக்க வேண்டும் என்று மலைவாழ் மக்களின் எதிர்பார்ப்பை பொன்னுசாமி எம்.எல்.ஏ. மூலம் தெரிந்து கொண்டேன். அதன்படி ரூ.1 கோடியே 46 லட்சத்தில் கொல்லிமலையில் பிரேத பரிசோதனை கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மருத்துவமனை களில் பணியாற்றும் செவிலியர்கள் இங் கேயே தங்கி வேலை பார்க்கும் வகையில் ரூ.1 கோடியே 4 லட்சம் மதிப்பில் கட்டு வதற்கு ஏற்பாடு செய்யப்படும். முதல் வருடன் தில்லி சென்று ஒன்றிய சுகா தாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டி யாவை சந்தித்து, திருச்சியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு வலியு றுத்த உள்ளோம். கொல்லிமலையில் சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தொடங்குவதற்கும் ஏற்பாடு செய்யப் படும், என்றார். தொடர்ந்து கொல்லிமலை ரத்த வங்கியில் சேந்தமங்கலம் போலீசார் ரத்ததானம் செய்தனர். இதை தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்வழங்கப்பட்டன. இந்த விழாவில் சுகாதார பணிகள் இணை இயக்குநர் ராஜ்குமார், சேந்த மங்கலம் அட்மா குழு சேர்மன் அசோக் குமார், கொல்லிமலை அட்மா குழு சேர்மன் செந்தில் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், தன பால் உள்பட பலர் கலந்து கொண் டனர்.