districts

img

கார் விபத்தில் ஆசிரியர்கள் பலி லோக் அதாலத் மூலம் ரூ.1.32 கோடி இழப்பீடு

சேலம், மார்ச் 14- சேலத்தில் கார் விபத்தில் உயிரிழந்த ஆசிரியர்களின் குடும்பத்திற்கு லோக் அதாலத் மூலம் ரூ.1.32 கோடி இழப் பீடு வழங்க சமரசம் காணப்பட்டது.  சேலம் மாவட்டத்தில் நீண்ட காலமாக நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில் லோக் அதாலத் சனியன்று (மார்ச் 12) நடைபெற்றது. சேலம் ஒருங் கிணைந்த நீதிமன்றம் மற்றும் ஆத்தூர், எடப்பாடி, மேட்டூர், ஓமலூரில் உள்ள சார்பு நீதிமன்றங்களில் இருந்து 5,986 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் கடந்த 25 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 12 வழக் குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும், கடந்த 2019 ஆம் ஆண்டு மேட்டூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு காரில் சென்றபோது திருச்சி மனச்சநல்லூரில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு ஆசிரியர்கள் உயிரிழந்த வழக்கில், சமரச தீர்வு  காணப்பட்டது.  இதில் உயிரிழந்த ஆசிரியர் ஒருவருக்கு ரூ. 86.50 லட்ச மும், மற்றொரு ஆசிரியருக்கு ரூ. 16 லட்சமும், அதே விபத் தில் கால் இழந்த சிறுமிக்கு 30 லட்சமும் என மொத்தம் 1 கோடியே 32 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க சமரசம் காணப்பட்டது. இதையடுத்து இதற்கான உத்தரவின் நகலை மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு பாதிக்கப் பட்ட குடும்பத்தினருக்கு வழங்கினார்.