மேட்டுப்பாளையம், ஜூலை 28- வனத்துறை சார்பில் மக்களுக்கு இலவசமாக வழங்க 1.25 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு தயார் நிலை யில் வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு, பசுமை தமிழ்நாடு இயக்கத்தை ஒரு முதன்மை திட்டமாக தொடங்கியுள்ளது. தமிழகத்தில் தற் போதுள்ள பசுமை பரப்பு 23.71 சதவிகிதமாக உள்ளது. இதனை 33 சதவிகிதமாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கோவை வன விரிவாக்கம் கோட்டத் திற்குட்பட்ட மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனச் சரக நாற்றுக்கள் உற்பத்தி மையங்களில் சுமார் 1.25 லட்சம் மரக்கன்றுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இங்கு தரமான மண் மற்றும் விதைகள் மூலம் சவுக்கு, தேக்கு, பலா, பாதாம், வேம்பு, மகாகனி, மலைவேம்பு, இலுப்பை, மகிழம், நீர்மருது, சந்தனம் உள்ளிட்ட 25 வகையான மரக்கன்றுகள் வளர்க்கப் பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த மரக்கன்றுகளை விவசாயிகள், பொதுமக்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இலவசமாக வழங்கப்பட வுள்ளன. விருப்பம் உள்ளவர்கள் அருகில் உள்ள வனத் துறை அலுவலகத்தை அணுகலாம் என்று அறிவிக்கப்பட் டுள்ளது. மேலும், அடர்ந்த காட்டை உருவாக்கும் வகையில் யானை உள்ளிட்ட தாவர உண்ணி வன உயிரினங்கள் விரும்பி உண்ணும் மரக்கன்றுகளை வாய்ப்புள்ள வனப்பகுதிக்குள் நடவும் திட்டமிடப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரி வித்துள்ளனர்.