திருப்பூர், பிப்.12- கோவை நாடாளுமன்ற தொகு திக்குட்பட்ட பல்லடம் மற்றும் சூலூர் சட்டமன்ற தொகுதிகளில் சமுதாய நலக்கூடம், குடிநீர் தொட்டி, உயர் மின் கோபுர விளக்கு என எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.1 கோடியே 15 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை பி.ஆர்.நடரா ஜன் எம்.பி., திங்களன்று திறந்து வைத்தார். திருப்பூர் மாநகராட்சி, 59 ஆவது வார்டுக்குட்பட்ட அமராவதிபாளை யத்தில் ரூ.14 லட்சத்தில் அங்கன் வாடி மைய கட்டிடம், பல்லடம் ஒன்றி யம் ஆறுமுத்தம்பாளையம் ஊராட்சி சேகாம்பாளையத்தில் கிராம சாலை, 63 வேலம்பாளையம் ஊராட்சியில் ரூ.3 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பில் சூரிய ஒளி உயர்மின் கோபுர விளக்கு, பூமலூர் ஊராட்சி வலையபாளை யத்தில் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப் பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, சித்தம்பலம் ஊராட்சி புள்ளியப்பம் பாளையத்தில் ரூ.37 லட்சத்து 80 ஆயி ரம் மதிப்பில் சமுதாய நலக்கூடம், பொங்கலூர் ஒன்றியம் கேத்தனூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 9 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பில் மேல் நிலை குடிநீர் தொட்டி, பல்லடம் ஒன் றியம் புளியம்பட்டி ஊராட்சியில் ரூ.3 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பில் சூரிய ஒளி உயர்மின் கோபுர விளக்கு, மல் லேகவுண்டம்பாளையம் ஊராட்சி யில் ரூ.5 லட்சம் மதிப்பில் பயணி கள் நிழற்குடை, பருவாய் ஊராட்சி வீ கார்டனில் ரூ. 8 லட்சத்து 50 ஆயி ரம் மதிப்பீட்டில் பல்நோக்கு மையக் கட்டிடம் மற்றும் சூலூர் தொகுதிக் குட்பட்ட சாமளாபுரத்தில் ரூ. 20 லட் சம் மதிப்பீட்டில் கீழ்நிலை நீர் தேக்க தொட்டி ஆகிய நிறைவடைந்த பணி களை பி.ஆர் நடராஜன் எம்.பி., திறந்து வைத்தார். திருப்பூர் மாநகரத்துக்கு உட் பட்ட பகுதிகளில் நடைபெற்ற இந்நி கழ்ச்சிகளில் மாநகராட்சி மேயர் நா. தினேஷ்குமார், நான்காவது மண் டல தலைவர் இல.பத்மநாபன் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி. மூர்த்தி, தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெ யபால், தெற்கு ஒன்றியக் குழு உறுப்பி னர் சி சுப்பிரமணியம், கோபால் நகர் கிளைச் செயலாளர் ராமு உள் ளிட்டோர் பங்கேற்றனர். அத்துடன் தொகுதியில் நடைபெற்ற திறப்பு விழாக்களில் பல்லடம் கிழக்கு ஒன் றிய திமுக செயலாளர் சோமசுந்த ரம், திமுக மேற்கு ஒன்றியச் செயலா ளர் கிருஷ்ணமூர்த்தி, பல்லடம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேன் மொழி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் பல்லடம் ஒன்றியச் செயலா ளர் ஆர்.பரமசிவம், சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழ னிச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லடம் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வை.பழனிச்சாமி சி. முருகேசன் முருகசாமி மற்றும் எம்பி பி ஆர் நடராஜன் அலுவலகச் செய லர் கே.எஸ்.கனகராஜ் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.