கோவை, டிச.30- கோவையில் உடலில் மறைத்து வைத்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.1.10 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஷார்ஜாவிலிருந்து புதனன்று கோவைக்கு வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதி காரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், கோவை விமானத்தில் வந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சகுபர் சாதிக் சயத் அகமது, நசர்தீன் முகமது தம்பி, கலீல் ரகுமான் முஸ்தபா, தஸ்தகீர் காஜா மைதீன் ஆகிய நால்வரை பிடித்து சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற் கொண்டனர். அதில், அவர்களது உடலில் ஆசனவாய் பகுதியிலும், பேண்ட் பாக் கெட்டுகளிலும் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் களிடமிருந்து 2.2 கிலோ எடையுள்ள தங் கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் ஆகும். இதையடுத்து நசர்தீன் முகமது தம்பி மற்றும் கலீல் ரகுமான் முஸ் தபா ஆகிய இருவரை கைது செய்துள்ள அதிகாரிகள், தொடர் விசாரணையில் ஈடு பட்டுள்ளனர்.