உடுமலை, நவ. 29- திருமூர்த்திமலைக்கு அருகில் பொன்னாலம்மன் சோலை இருக்கி றது. இங்கு ஜெயக்குமார் என்பவரது தோட்டத்திற்கு அருகில் பாலம் கட்டு வதற்காகக் குழி தோண்டும்போது சுமார் 10 அடி ஆழத்தில் தோண்டிக் கொண்டிருக்கும்போது அழகான கற் சிலை கிடைத்துள்ளது. இதனை உடனடியாக கிராம நிர் வாக அலுவலருக்கும், வருவாய்த் துறை ஆய்வாளருக்கும் தகவல் தெரி விக்கப்பட்டது. அதேபோல் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினருக்கும் தகவல் கிடைக்கப் பெற்றது. அந்தக் கற்சிலையை ஆய்வு செய்ததில் சுமார் ஆயிரம் ஆண்டு காலத்திற்கு முற்பட்ட அம்மன் (கொற்றவை) வழிபாட்டை உறுதிப்படுத்தும் சிலை எனவும், அதற்கு பூதேவி, பார்வதி தேவி எனும் பெயரில் வழங்கப்பட்டி ருக்கலாம் எனவும், கற்சிலையில் மார் பில் அழகான கச்சை இருப்பதையும், கழுத்தில் அட்டிகை போன்ற நல்ல ஆபரணங்கள் இருப்பதாலும் இது பிற்காலத்தில் பெண் தெய்வ வழி பாட்டிற்காக போற்றப்பட்டு வந்த சிவ காம சுந்தரி, அழகு நாச்சியம்மன், மாரி யம்மன், காளியம்மன், அங்காளம் மன் எனவும் அழைக்கப்பட்டிருக்க லாம் எனவும் கூறப்படுகிறது. இந்தக் கற்சிலை இரண்டடி உய ரத்தில் அரை அடி அகலத்தில் கற் சிலை மிகவும் அற்புதமான கலை வடி வத்தில் செதுக்கப்பட்டதைப் பார்த் தால் இந்தப் பகுதியில் அதாவது பொன்னாலம்மன் சோலை எனும் இடத்தில் பெண் தெய்வ வழிபாடு இருந்ததையும்,
இங்கு மக்கள் தாய்த் தெய்வ வழிபாட்டை வலியுறுத்தும் வகையில் இந்தப் பெயர் அமைந்தி ருப்பதையும் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் வரலாற்றுப் பேரா சிரியர் ராபின், பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வர லாற்று ஆய்வாளர் முனைவர் விஜய லட்சுமி ஆகியோர் கருத்து தெரிவித் தனர். இந்தக் கற்சிலை முகம் மற்றும் கை கால்களில் அணிந்திருக்கும் ஆபண ரங்களின் கலை வடிவங்கள் மிகவும் நேர்த்தியாகவும், மக்கள் வழிபாட்டில் ஏற்கனவே இருந்ததையும் இது உறுதிப்படுத்தப்படுகிறது என்றனர். ஏற்கனவே பொன்னாலம்மன் சோலையில் ஆய்வு செய்தபோது திரு மூர்த்தி அணையிலிருந்து மேற்கே செல்லும் பாலாற்றங் கரையில் கோயில்கள் இருந்ததையும் அது பெண் தெய்வம் அரசி வழிபாடு, பூதேவி வழிபாடு, அங்காளம்மன், அழகு நாச்சியம்மன் வழிபாடு எனப் பெண் தெய்வ வழிபாடு இருந்ததை யும் அதைப் பழங்காலத்தில் வழிபட்டு வந்ததையும் கள ஆய்வின் வழி உறு திப்படுத்தப்பட்டது. இங்கிருக்கும் திருமூர்த்தி மலை பகுதி என்பது சங்க காலத்தில் உம் பற்காடு எனவும், பழமையான ஆதிகு டிகளின் தொன்மையான தாய்த் தெய்வ வழிபாட்டை வலியுறுத்துவ தாகவும் இந்தப்பகுதி இருந்ததை இக் கற்சிலை உறுதிப்படுத்தப்படுகிறது எனவும் கருத்து தெரிவித்தனர்.