நாமக்கல், ஏப்.3- நாமக்கல் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடை பெற்ற ‘விரல் மை, நம் வலிமை’ விழிப்புணர்வு நிகழ்ச்சி யில் 2 ஆயிரம் மாணவிகள் கலந்து கொண்டனர். நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவியர்கள் கலந்து கொண்ட ‘விரல் மை, நம் வலிமை” என்பதை வலி யுறுத்தும் வகையில், வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் 100 சதவிகிதம் வாக்கு பதிவை உறுதி செய்திடும் நோக்கில் இந்நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் மாணவிகள் அனைவரும், ‘வாக்களிக் கும் விரல் போன்ற வடிவத்தில் நின்று’ விழிப்புணர்வு ஏற்ப டுத்தினர். இதில் மாவட்ட தேர்தல் அலுவலர் ச.உமா, தேர்தல் பொதுப்பார்வையாளர் ஹர்குன்ஜித்கௌர், காவல் பார்வை யாளர் உஷா ராதா, செலவினப் பார்வையாளர் அர்ஜூன் பேனர்ஜி, காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஸ் கண் ணன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.