இறந்தவர்களின் உடல் உறுப்புகளை மீட்கும் திட்டத்திற்கான பாராட்டு விருதிற்கு, நீலகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், விருதை நீலகிரி மருத்துவக்கல்லூரி முதல்வர் கீதாஞ்சலியிடம் வழங்கினார்.