கோவை, நவ.14- நிறைமாத கர்ப்பிணியின் பனிக்குடம் உடைந்த நிலை யில், வலியால் துடித்துக் கொண்டிருந்த பெண்ணிற்கு அவசரம் கருதி 108 ஆம்பு லன்ஸ் ஊழியர்கள் பிரசவம் பார்த்து தாயையும், சேயை யும் பாதுகாத்தனர். கோவை மாவட்டம், லட் சுமி நகர், நல்லாம்பாளையம் சாலை, ரத்தினபுரி பகுதி யைச் சேர்ந்தவர் பழனிமுருகன். இவரின் மனைவி மம்தா (29). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு திங்களன்று இரவு வீட்டில் இருக்கும்போது பனிக்குடம் உடைந்து மிகுந்த வலியு டன் துடித்துள்ளார். இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தக வல் தெரிவித்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மம்தாவின் வீட்டுக்கு சென்று பார்க்கும்போது, அவருக்கு வலி அதிகரித்தது, குழந்தையின் தலை வெளியே வந்தது. இதைய டுத்து ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர் கோபாலகிருஷ்ணன் மற்றும் பைலட் ஜெயக்குமார் உதவியுடன் பிரசவம் பார்த்த னர். மம்தா ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். தாயையும், சேயையும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பாதுகாத்தனர். இதை யடுத்து கோவை அரசு மீனாட்சி தாய் சேய் நல மருத்துவமனை யில் சிகிச்சைக்காக தாய் சேய் இருவரையும் சேர்த்தனர். பரி சோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் நலமுடன் இருப்ப தாக தெரிவித்தனர். அவசரம் கருதி பிரசவம் பார்த்த ஆம்பு லன்ஸ் ஊழியர்களுக்கு பல்வேறு தரப்பினரின் பாராட்டுக் கள் குவிந்து வருகின்றன.