கிருஷ்ணகிரி, ஜன 21- ஓசூர் வட்டம், நல்லூர் ஊராட்சி சேவகையானபள்ளி அருகே கொத்தப்பள்ளியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரு கின்றனர். கடந்த 16 ஆண்டு களாக 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் 100 விடுக்காடு தேர்ச்சி பெற்று வரு கின்றனர். எனவே, இந்தப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று ஊராட்சி மன்றத் தலைவர் மம்தா வெங்கடேஷ் தலைமையில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மாவட்ட கல்வி அலுவலரிடம் மனு அளித்த னர். மனுவை பெற்றுக் கொண்ட அலுவலர் மாவட்ட நிர்வாகத்திற்கும் அரசுக்கும் இந்த கோரிக்கையை தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.