districts

img

குடிநீர் கேட்டு கிராம மக்கள் மறியல்

கிருஷ்ணகிரி, ஏப். 4- ஊத்தங்கரை அடுத்த நொச்சிபட்டி ஊராட்சி ஊணாம்பாளையம் குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஊணாம்பாளையத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில் ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஊத்தங்கரை வட்ட வளர்ச்சி அலுவலவரிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்தையும், வட்ட வளர்ச்சி அலுவலரை யும் கண்டித்து காலிக்குடங்க ளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்தங்கரை காவல் துறையினரும், அதி காரிகளளும் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். உடனடியாக தடையின்றி சீராக குடிநீர் வினியோகிக்க ஒரு சில நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்திரவாதம் அளித்த னர். இதையடுத்து அனை வரும் கலைந்து சென்றனர்.