districts

img

ஏரியில் திருடப்படும் மணல்: தடுத்து நிறுத்திய வாலிபர்கள்

கிருஷ்ணகிரி, ஜூன் 16- கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மிடுகரப் பள்ளி கிராமம் ஒட்டிய பகுதியில் ஏரி உள்ளது. ஒரு தனியார் வாகனம் ஏரிக்குள் பொக்லைன் எந்திரம் மூலம் மண் அள்ளிக் கொண்டிருந்தது. மிடுகரப்பள்ளி மக்கள் விசாரித்தபோது மலைக்கோயில் சுற்றிலும் கிரிவலம்  செல்வதற்கு பாதை அமைப்பதற்காக மண் அள்ளுவதாக கூறியுள்ளனர். இதையறிந்த வாலிபர் சங்க மாவட்ட துணைத் தலைவர் நாகேஷ் பாபு தலைமையில் கிளை நிர்வாகிகள் சென்று விசாரித்து  பொதுப்பணித் துறையின் அனுமதி பெறாமல் ஏரியில் திருட்டுத் தனமாக மண் எடுப்பதை தடுத்து நிறுத்தி னர். மேலும் இதுகுறித்து அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அங்கி ருந்து டிப்பர் லாரி, பொக்லைன் திரும்பிச் சென்றது. ஏரியில் தனியர் மண் எடுத்து விற்பதை கண்டுகொள்ளாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.