கிருஷ்ணகிரி, மார்ச் 6- கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் மத்திகிரி - ஆனேக்கல் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசாக்கர வாகனத்தில் வந்தவரை சேதனை செய்தனர். அப்போது அவர் வைத்திருந்த மூட்டை யில் 5 பைகளில் 250 கிலோ ரேசன் அரிசி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், ஓசூர் மத்திகிரி குருப்பட்டியை சேர்ந்த ஜீலன் (40) என்பதும் மத்திகிரி, குருப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ரேசன் அரிசியை வாங்கி கர்நாடகாவில் விற்பனை செய்வதும் தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறை யினர் ஜீலாலை கைது செய்து அவரிட மிருந்த 250 கிலோ அரிசி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.