கிருஷ்ணகிரி, மார்ச்1- கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் நகர் பேருந்து நிலையம் அருகே ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 1991ஆம் ஆண்டு சமுதாயக் கூடம் அமைப்பதற்கான கட்டுமான பணி துவங்கப்பட்டது. பின்னர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது 1997ஆம் ஆண்டு திறப்பு விழா நடை பெற்றது.
சுமார் 1 ஏக்கர் பரப்பில் 15 சென்ட் அளவில் ஒரே நேரத்தில் 250 பேர் அமரும் வகை யில் மேல் தளம், தங்கும் அறைகள், 150 பேர் அமர்ந்து சாப்பிடும் உணவுக் கூடம், தனி சமையலறை என அனைத்து வசதி களுடன் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த சமுதாயக்கூடம் சில ஆண்டுகள் மட்டுமே பொது மக்களுக்கு பயன்பட்டு வந்தது. பின்னர் எம்.சீனிவாசன், சந்திரன் ஆகியோரிடம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டதாக பொதுமக்கள் தெரி வித்தனர். ஆனால் தற்போது இந்த சமுதாயக் கூடம் தூசி படிந்து, பரா மரிப்பின்றி உள்ளது. மேலும் அதன் பின்புறம் உள்ள இடம் பேருந்து நிலை யத்திற்கு வருபவர்கள் இருசக்கர வாகனம் நிறுத்துவதற்கான இடமாக ரூ.16,000 வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
முன் பகுதியில்மண்டபத்தை அடைத்து தகரத்தால் அமைக்கப்பட்டுள்ள பாம்பே பிக் பஜார் கடை ரூ. 60 ஆயிரத்திற்கு வாடகைக்கு விடப்பட்டுள்ள தாகவும் கூறப்படுகிறது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்க ளுக்கு பயன்படாமல் தனி நபர்கள் வசம் உள்ளதால், அப்பகுதி மக்கள் தங்கள் வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு கூடுதல் பணம் செலவு செய்ய வேண்டி யுள்ளது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பர்கூர் வட்ட குழு சார்பில் தனி நபர்கள் வசம் உள்ள சமுதாயக் கூடத்தை மீட்டு, சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்து வலி யுறுத்தப்பட்டது. பின்னர் செயலாளர் டி.சீனிவாசன் கூறுகையில், தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு அரசே நேரடியாக சமுதாயக் கூடத்தை பராமரிக்க வேண்டும் என்றார். - ஒய்.சந்திரன்