கிருஷ்ணகிரி, ஜூன்14- காவேரிப்பட்டிணம் அரசு மருத்துவ மனையில் ரத்து செய்யப்பட்ட பிரசவம், உடற்கூறாய்வு,அவசர சிகிச்சை பிரிவு களை உடனடியாக தொடங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
தற்போது உடற்கூறாய்வு செய்வதை கடந்த ஆறு மாதங்களாக நிறுத்தி உள்ள னர்.மேலும் இங்கு அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை பதிவு கூட செய்யா மல் 25 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள போளுப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு திருப்பி அனுப்பு கின்றனர். சில தனியார் மருத்துவ மனைக ளுக்கு ஏஜென்ட்கள் போல பரிந்துரை செய்கின்றனர்.இதனால் ஏராளமான உயிரி ழப்புக்கள் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து பல புகார்கள் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை என்று விவ சாயிகள் தெரிவித்தனர்.
24 மணி நேர மருத்துவ சேவை,உள் நோயாளிகள் பிரிவு,சட்டம் சார்ந்த மருத்து வம் ஆகியவற்றை முன் போலவே செயல்படுத்த வலியுறுத்தி தென்னை விவ சாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கே.சி.இராமசாமி தலைமையில் காத்திருப்பு போராட்டம் காவேரிப்பட்டிணம் அரசு மருத்துவமனை முன்பு நடைபெற்றது.
தவிச மாநில செயலாளர் பி.பெருமாள், மாவட்ட செயலாளர் பிரகாஷ், சிபிஎம் மாவட்ட செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன் ஆகி யோர் போராட்டத்தை வாழ்த்தி பேசினார்.
மாவட்டத் தலைவர் முருகேசன், பொரு ளாளர் எம்.எம்.ராஜு,வட்டத் தலைவர் கடல்வேந்தன்,வட்ட குழு வெங்கடா சலம்,வாலிபர் சங்க மாவட்ட தலைவர் சக்தி கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை
போராட்டத்தையடுத்து காவேரிப்பட்டி னம் காவல்துறையினரும் மருத்துவ மனையின் தலைமை அலுவலர் மருத்துவர் சோமசுந்தரம் ஆகியோர் விவசாயிகள் சங்க தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி னர். இக்கோரிக்கை குறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கும் சுகாதாரத் துறைக்கும் தகவல் தெரிவித்து நட வடிக்கை எடுப்பதாக கூறியதன் அடிப்படை யில் காத்திருப்பு போராட்டம் கைவிடப் பட்டது.