கிருஷ்ணகிரி, மார்ச் 13- பொம்மேபள்ளி கிராமத்தில் கோழிப் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3500 கோழிக் குஞ்சுகள் கருகி உயிரிழந்தன. கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த பொம்மேபள்ளி கிராமத்தில் சாந்தா என்பவர் தனது வீட்டின் அருகே 4,000 கோழிகளை வளர்க்கக்கூடிய இரு பண்ணைகளை அமைத்து அதில் கோழிகளை வளர்த்து வருகிறார். ஒரு பண்ணையில் சுமார் 3,500 வளர்ந்த நிலையில் உள்ள கோழிகள் இருந்துள்ளன. மற்றொரு பண்ணையில் 3,500 கோழி குஞ்சுகள் இருந்துள்ளன. இந்நிலையில் சன்க்கிழமை இரவு கோழப்பண்ணை திடீரென தீப்பிடித்து எரியத் துவங்கியுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சாந்தா, அவரது மகன் திருப்பதி ஆகியோர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், அவர்களால் முடிய வில்லை. இதுகுறித்து பர்கூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால் பண்ணையில் இருந்த 3500 கோழி குஞ்சுகள் உட்பட பண்ணை முழுவதும் எரிந்து நாசமானது. இச்சம்பவம் குறித்து மத்தூர் காவல் துறையினர் விசாரணை நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டி ருக்கலாம் என தெரியவந்துள்ளது. சுமார் 3 லட்சம் மதிப்பிலான பண்ணை மற்றும் கோழி குஞ்சுகள் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது.