கிருஷ்ணகிரி, மே 26 - கிருஷ்ணகிரி ஆவின் பால் பண்ணையில் தீவன தொழிற்சாலை நிறுவ வேண்டும் என பால் உற்பத் தியாளர்கள் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர்கள் சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட 2ஆவது மாநாடு தலை வர் கே.சி.ராமசாமி தலைமையில் வெள்ளி யன்று (மே 26) நடை பெற்றது. மாநில பொதுச் செயலா ளர் கே.எம்.முகமது அலி மாநட்டை துவக்கி வைத்தார். செயலாளர் அண்ணாமலை வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பிரகாஷ், சிஐடியு மாவட்டத் தலைவர் நஞ்சுண்டன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
தீர்மானங்கள்
பால் கொள்முதல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ. 10 உயர்த்த வேண்டும். தினசரி பால் கொள்முதலை 32 லட்சத்திலிருந்து ஒரு கோடி லிட்டராக உயர்த்த வேண்டும், நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், ஆவின் பால் பொருட்களின் விற்ப னையை விரிவுபடுத்த விற்பனை மையங்களை அதிகப்படுத்த வேண்டும். குழந்தைகள் சத்துணவு திட்டத்தில் பால் பவுடர் சேர்த்து வழங்க வேண்டும். கால்நடைகளுக்கு வருடத் திற்கு இரண்டு முறை நோய் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள்
தலைவராக கே.சி.ராம சாமி, செயலாளராக எம். அண்ணாமலை, பொரு ளாளராக பாஸ்கரன் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்ட னர். முன்னதாக மாவட்டக் குழு உறுப்பினர் மதன் வரவேற்றார். பொருளாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.