districts

img

கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரிக்கை

கிருஷ்ணகிரி,ஜன 6- கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தும் ஜல்லி, எம் சேண்டு, பிசேண்டு விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று கட்டுமான பொறியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத் தில் ஓசூர் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் கட்டுமான பணிகள் மிக வேக மாக நடைபெற்று வரும் நிலையில், கட்டுமான பொருள்க ளின் தேவை மிக அதிக மாக உள்ளது.   ஆனால், கர்நாடகாவில் சுமார் 2500 குவாரிகள் மூடப் பட்டுள்ளதால் அங்கு கட்டு மான பொருட்கள் பற்றாக் குறை, தட்டுப்பாடு நிலவி வருகிறது இதை பயன்படுத்திக் கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தினமும் 2000க்கும் மேற்பட்ட லாரி களில் கட்டுமான பொருட் கள் சட்டத்திற்கு புறம்பாக கர்நாடகாவுக்கு கடத்தப் படுகிறது. இது குறித்து ஓசூர் கட்டுமானபொறியாளர்கள் சங்கத் தலைவர் ராஜேந்திரன், பொதுச் செய லாளர் வெங்கட்ட ரமணி, பொருளாளர் செந்தில்  ஆகியோர் வருவாய் கோட்டாட்சி யரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அதில், கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து கட்டு மானப்பொருட்கள் கடத்தப் படுவதற்கு தமிழக கர்நாடகா எல்லையிலுள்ள சோதனைச் சாவடி அதிகாரிகள் துணைபோகி றார்கள். இதனால் 6 மாதங்களுக்கு முன்பு ஒப்பந்தம் செய்துக்கொண்ட கட்டுமான வேலைகளில் அதிக நட்டம் ஏற்படுகிறது என்றும், கட்டுமானம் மற்றும் கட்டட உரிமையாளர்கள், பொறியாளர்களுக்கும் இடையில் மோதல் போக்கு நிலவுகிறது என்றும் தெரி வித்துள்ளனர்.