districts

ஆக்கிரமிப்பு மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தை மீட்க கோரிக்கை

கிருஷ்ணகிரி, ஏப் 4- கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே ஜிஞ்சுப்பள்ளி, திப்பனப்பள்ளி ஊராட்சிகளை யொட்டி 200 ஏக்கர் மேய்ச்சல் புறம்போக்கு நிலம் உள்ளது. இதில் 40 ஏக்கர் பரப்பள வில் அந்த பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் 2 தலை முறைகளாக விவசாயம் செய்து வரு கின்றனர். தற்போது இந்த நிலத்தை  ஊராட்சி தலை வர் உள்ளிட்டோர் ஏலம் விட்டு கற்கள், மண்ணை வெட்டி எடுத்து விற்று வருவதாகவும், விவசாயிகள் பயன்படுத்தும் மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் சொல்வதை கேட்காவிட்டால் கட்டப்பஞ்சாயத்து நடத்தி, அபராதம் விதிப்பதாகவும், இந்நிலத்தை பறிப்பதற்காக வருவாய் அலுவலர் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் அந்த நிலத்தில் விவ சாயம் செய்து வரும் ஏழை விவசாயிகள் தொடர்ந்து விவசாயம் செய்ய அனுமதிக்க வேண்டும், அரசு திட்டப்பணிகளுக்காக இந்த நிலத்தை கேட்டால் விவசாயிகள் வழங்க தயாராக உள்ளனர். ஆனால் ஊர் பெரிய தனக்காரர், ஊராட்சி தலை வர், ஆக்கிரமிப்பாளர்கள் மீது உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என திப்பனப் பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ண வேணி கிருஷ்ணன், மாதேஷ், ரமேஷ் உள்ளிட்ட பலர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மனு அளித்தனர்.