ஓசூர், ஏப். 8- கெலவரப்பள்ளி அணைக்கு அதி களவில் நுரை பொங்கி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மவட்டம், ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்கத்திற்கு விநாடிக்கு 340 கனஅடி நீர் வரத்து உள்ளது. அந்த நீர் 3 மதகுகள் வழியாக தென்பெண்ணை ஆற்றில் வெளி யேற்றப்பட்டு வருகிறது. அணை யின் முழுக்கொள்ளளாவன 44.28 அடிகளில் தற்போது 41.49 அடிகள் நீர் சேமிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து வெளி யேற்றப்படும் தென்பெண்ணை ஆற்று நீரில், குவியல் குவிய லாக நுரைப்பொங்கி காணப்படுவ தால் விவசாயிகள் அதிர்ச்சிய டைந்துள்ளனர். கர்நாடகா மாநிலம் தென்பெண்ணை ஆற்றங்கரை யோரம் செயல்பட்டு வரும் தொழிற் சாலைகள், ரசாயனக் கழிவு களை,தென்பெண்ணை ஆற்றில் கலப்பதை வழக்கமாக கொண்டுள்ளன. தற்போது தென்பெண்ணை ஆற்றில் வெளி யேறும் ரசாயன நுரை, துர்நாற்றம் வீசுவதுடன், வெள்ளை நிறத்தில் பனி போர்த்தியது போல் காணப்படுகிறது. மேலும் இவை காற்றில் பறந்து அந்த பகுதியில் உள்ள செடி கொடிகள் மீது திட்டு, திட்டாக படர்வதும், அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்ப வர்கள் மீது விழுவதாலும் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.