கிருஷ்ணகிரி,ஜூன்24- 28 வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி கிருஷ்ணகிரி அரசுப் பள்ளி மைதானத்தில் துவங்கியது. கிருஷ்ணகிரியில் மூன்றாண்டுகளுக்கு பின்பு அகில இந்திய 28 ஆவது மாங்கனி கண்காட்சி நடத்தப்படுகிறது. 25 நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி திறந்து வைத்து 1.15 கோடிக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களையும் பாராட்டி பரிசுகள் வழங்கினார். விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார். நிகழ்ச்சியை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன் ஒருங்கிணைத்தார். கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாபு, துணைத் தலைவர் சாவித்திரி, ஊராட்சி குழுத் தலைவர் மணிமேகலை நாகராஜ், ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், பர்கூர் தொகுதி மதியழகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.