காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட பெரிய காஞ்சி, சின்ன காஞ்சி, பிள்ளையார் பாளையம், ஓரிக்கை உள்ளிட்ட 13 மையங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகரச் செயலாளர் டி.ஸ்ரீதர் தலைமையில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. இதில் மாநிலக்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார், மாவட்டச் செயலாளர் சி.சங்கர், செயற்குழு உறுப்பினர் ஆர்.சவுந்தரி, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.