காஞ்சிபுரம்,ஜன.18- காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்தில் திருவிழா நடைபெறு வது வழக்கம். அதன்படி, ஜன.16 அன்று சுவாமியை காஞ்சிபுரத்திலிருந்து கண்ணாடி பல்லக்கில் வாலாஜா பாத் வழியாக பழையசீவரம் கிரா மத்திற்கு எடுத்துச் சென்றனர்.
இந்நிகழ்வில் முதலில் யார் பிரபந்தம் பாடுவது என்ற பிரச் சனை உள்ளது. இது தொடர்பாக வழக்கு பல ஆண்டு காலமாக நிலு வையில் உள்ளது.
இந்த பிரச் சனைக்கு தற்காலிகமாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதன்படி, இரு பிரிவினரும் இக்கோயிலில் பிரபந்தம் பாட தடை விதித்தது. இந்த நிலையில், வடகலை, தென்கலையினர் இடையே வாய் சண்டை ஏற்பட்டது. அது சற்று நேரத்தில் தள்ளுமுள்ளாக மாறி கடைசியில் அடிதடியில் முடிந்தது. ஒரு பிரிவினரை மற்ற பிரிவினர் விரட்டி தாக்குவதும், தப்பி ஓடுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதுமட்டுமல்லாமல் கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு இரு பிரிவினர்களும் சென்று விட்டனர். மேலும் வடகலை, தென்கலை பிரிவினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.