காஞ்சிபுரம், ஆக.29-
காஞ்சிபுரத்திலுள்ள காமாட்சி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து செல்கிறார்கள்.
இந்நிலையில், காமாட்சி அம்மன் கோவிலில் கடந்த 3 மாதத்திற்கு பிறகு கோவிலில் இருந்த உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் முன்னி லையில் அறநிலையத்துறை ஆய்வா ளர் பிரித்திகா, கோவில் செயல் அலு வலர்கள் பா. முத்துலட்சுமி, அமுதா, மற்றும் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் நிர்வாகிகள் கீர்த்திவாசன், ஜெயராமன், மற்றும் காமாட்சி அம்மன் கோவில் மணியக்காரர் சூரிய நாராயணன் ஆகியோர் உண்டியல் எண்ணும் பணி யினை பார்வையிட்டனர். இதில் ரொக்க மாக ரூ.58 லட்சத்து 51 ஆயிரத்து 470, தங்கம் 190 கிராம், வெள்ளி 460 கிராம் பக்தர்களின் காணிக்கையாக கிடைத்து இருந்ததாக அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.