districts

எரிவாயு சிலிண்டர் குடோன் தீ விபத்தில் 12 பேர் படுகாயம்

காஞ்சிபுரம்,செப்.29- காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த தேவரியம்பாக்கம் பகுதியில் தனியார் சிலிண்டர் குடோனில் கியாஸ் கசிவின்  காரணமாக  புதனன்று மாலை  தீ விபத்து ஏற்பட்டது.  சிலிண்டர் வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் ஊழியர்கள் அலறியடுத்து தீ  காயங்களுடன் வெளியே ஓடினர். கியாஸ் சிலிண்டர் குடோனில் ஏற்பட்ட தீ அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கும் பரவ தொடங் கியது. இது குறித்து தகவல் அறிந்த தீய ணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணி யில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் அங்கு  இருந்த பூஜா (வயது 19), கிஷோர் (13),  கோகுல் (22) சண்முகபிரியன் (17)  உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.  காயம் ஏற்பட்டவர்களை மீட்டு செங்கல் பட்டு அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக் காக அனுப்பி வைத்தனர். குன்றத்தூர்,  ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் கரும்புகை சூழ்ந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற ஒரகடம்  காவல்துறையினர் இந்த சிலிண்டர் குடோன்  அனுமதியுடன் நடத்தப்படுகிறதா? இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கு என்ன காரணம்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.