பெரம்பலூர், ஜூலை 31 - பெரம்பலூர் அருகே சனிக்கிழமை அதிகாலை லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் பேருந்து ஓட்டு நர், நடத்துநர் சம்பவ இடத்தி லேயே பலியாயினர். மேலும், 12 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு பேருந்து ஒன்று சென்னையில் இருந்து திருச் சியை நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பெரு வளப்பூர் தேவேந்திரன் (48) ஓட்டி வந்தார். நடத்துநராக அரியலூர் மாவட்டம் உடை யார்பாளையம், அய்யப்ப நாயக்கன்பேட்டை கிராமம் முருகன் (56) இருந்தார். அதிகாலை 4.30 மணி அளவில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே உள்ள சர்க்கரை ஆலை எறை யூர் - சின்னாறு பகுதியில் பேருந்து வந்து கொண்டி ருந்த போது, முன்னால் திருச்சிக்கு இரும்பு குழாய் களை ஏற்றி சென்ற லாரி மீது மோதி விபத்திற்குள்ளா னது. இதில், பேருந்தை ஓட்டி வந்த திருச்சி தீரன் நகர் பேருந்து பணிமனையைச் சேர்ந்த ஓட்டுநர் தேவேந் திரன், நடத்துநர் முருகன் ஆகியோர் சம்பவ இடத்தி லேயே உடல் நசுங்கி பரிதாப மாக உயிரிழந்தனர். மேலும், பேருந்தில் வந்த சுமார் 12 பயணிகளுக்கு படுகாய மடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீ சார் மற்றும் பெரம்பலூர் தீயணைப்பு மீட்பு படையி னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பேருந்தின் இடிபாடுகளில் சிக்கிய ஓட்டுநர், நடத்துந ரின் உடல்களை மீட்டு உடற் கூராய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த மங்களமேடு போலீ சார், விபத்து குறித்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.